அருள்மிகு வலையபாளையம் மாரியம்மன் திருக்கோயில்,ஈரோட்டில் இருந்து சத்தி செல்லும் வழியில் அத்தாணி அருகே உள்ளது. திருக்கோயில் 1977 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பதினெட்டாம் தேதி பிங்கள வருடம் இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது.இத்திருக்கோயிலை வலையர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் பராமரித்து வருகின்றனர்.ஆதலால் இத்திருக்கோயில் வலையப்பாளையம் மாரியம்மன் திருக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.இக்கோயிலில் கோபுரம் ஒரு நிலை கோபுரம் ஆக உள்ளது இதில் மூன்று கலசங்கள் அமையப்பெற்றுள்ளது இதன் உயரம் 27 அடி ஆகும்.இத்திருக்கோயிலின் சிறப்பாக கருதப்படுவது திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியம் ஆகும்.இத்திருக்கோயிலில் 27 சுதை சிற்பம் காணப்படுகிறது மற்றும் இத்திருக்கோயிலில் ஒன்பது கற்சிலைகள் உள்ளது