ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், காடையாம்பட்டி, ஆண்டிக்குளம் கிராமத்தில் பவானி – சத்தியமங்கலம் சாலையில் அருள்மிகு பண்டார அப்பிச்சி பகவதியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஈரோட்டிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலிருந்து 2 கி.மீ.தொலைவிலும் உள்ளது. அருள்மிகு பண்டார அப்பிச்சி பகவதியம்மன் திருக்கோயில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலில் பகவதி அம்மன் சன்னதி தனியாகவும் பண்டார அப்பிச்சி சன்னதி தனியாகவும் காணப்படுகிறது. அருள்மிகு பகவதியம்மன் சன்னதி கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. கருவறையின் நடுவே நின்றகோலத்தில் அருள்மிகு பகவதி அம்மன் அருள்பாலிக்கின்றார். இச்சன்னதி செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அர்த்தமண்டபத்தின் முன் தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டு அதில் நந்திவாகனம், பலிபீடம் ஆகியவை...