ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் மொடக்குறிச்சியில் அருள்மிகு கரியகாளியம்மன் வடக்குநோக்கி அருள்பாலிக்கின்றார். இவ்வூர் ஈரோட்டிலிருந்து பதினாறு கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோயில் ஐந்துநிலை இராஜகோபுரத்துடன் காணப்படுகிறது.அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோயில் கருவறை அர்த்தமண்டபம் மகாமண்டபம் வசந்தமண்டபம் தற்காலிக கொட்டகை ஊஞ்சல் கொடிமரம் விளக்குத்தூண் ஐந்துநிலை இராஜகோபுரம் குறிச்சி ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. சதுரமான கருவறையின் நடுவே வலதுகாலை பீடத்தின் மீது ஊன்றியும இடதுகாலை அசுரன்மீது வைத்து அமர்ந்த கோலத்தில் எட்டு கரங்களுடன் கரங்களுடன் அருள்மிகு கரியகாளியம்மன் வடக்குநோக்கி அருள்பாலிக்கின்றார். அம்மனின் தலையை ஜூவாலை மகுடமும் அம்மனைச் சுற்றி திருவாசியும் அலங்கரிக்கின்றன. கருவறையின் புறச்சுவர் அதிட்டானம் முதல் பிரஸ்தரம் வரை கருங்கற்களைக் கொண்டும் கிரீவம் சிகரம்...
| 06:30 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:30 PM IST | |
| 12:30 PM IST - 08:30 PM IST | |
| காலை ஆறு மணி முதல் பிற்பகல் பன்னிரண்டு முப்பது மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு முப்பது மணிவரை தரிசன நேரம். விசேஷ தினங்களில் காலை ஐந்து மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை தரிசன நேரம் | |