நமது திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயில் ஆகும். தெய்வ புலவர் திருவள்ளுவர் வணங்கி வந்த தெய்வம் திருமணியம்மன் என்பது செவி வழி செய்தியாகும் இத் திருக்கோயில் சுமார்200 வருடங்கள் பழமை வாய்ந்த திருக்கோயில் ஆகும். திருமங்கலம் கிராமமாக இருந்த காலத்தில் கிராம தேவதையாக மக்கள் வழிபட்டு வந்தனர் சுற்றிலும் வயல் நடுவே 10க்கு10 அளவு சிறிய திருக்கோயில் ஆகும் அம்மன் முன்பு ஒரு புற்று இருந்தது. இப்போது அந்த புற்று மட்டும் தனியாக இருந்து வருகிறது. 1980-ம் ஆண்டு அருள்மிகு பஞ்சமுக விநாயகர், அருள்மிகு தேவி திருமணியம்மன் மற்றும் அருள்மிகு பக்த ஆஞ்சநேயர் புதியதாக கட்டப்பட்டு திருகுடமுழக்கு நடைபெற்றது. 1993 ம் ஆண்டு அருள்மிகு நவகிரக...