நெருப்பெரிச்சல் பகவதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், நெருப்பெரிச்சல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.1 கொங்கு வெள்ளாளக் கவுண்டர் கூட்டங்களில் ஒன்றான தூரன் கூட்டத்தினர் வழிபடும் குலதெய்வக்கோயிலாகும். இக்கோயிலில் பகவதியம்மன் சன்னதியும், பரமசிவன், அழகுநாச்சியம்மன், விநாயகர், நவக்கிரகங்கள், பேச்சியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் ஆண்டு திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.