கால் நடை பயணமாக சென்ற ஊர் மக்கள் வனங்கள் நிறைந்த இப்பகுதியை கடந்து சென்று வந்திருந்தனர்.இக்கட்டத்தில் மக்கள் இரவினில் நடமாடவும், விச பூச்சிகளிடத்திலிருந்து தங்களை காக்கவும் தோட்டத்தின் மத்தியில் இந்த கருப்பராயனை மேடையில் அமைத்து வழிபட துவங்கினர். கரிய உருவத்தில் ஒரு கையில் அருவாலும், மறு கையில் துண்டுத்தடியும் ஏந்திய கருப்பராயனை இரவில் பார்த்தால் பொதுமக்களே பயப்படும் நிலை இருந்தது. பல ஆண்டு காலத்திற்கு எல்லைச் சாமியாக இக்கோயில் இருந்தது.