திருப்பூர் மாவட்டம் கொடுவாயிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் காட்டூர் புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு நீலியம்மன் திருக்கோயில். காட்டூர் புதூர் கிராமத்தில் தோட்டத்தின் நடுவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கொங்கு செட்டியார்கள் என்னும் குலக் கூட்டத்தினரின் பெண் குல தெய்வமாக உள்ளது. கோயிலை சுற்றி கல்வேலி அமைந்துள்ளது. நடுவில் கோயில் அமைந்துள்ளது கோயிலுக்கு முன்னால் பலீ பீடம் அமைந்துள்ளது சுற்று பகுதியில் விநாயகர் சிலை அமைந்துள்ளது.