இத்திருக்கோயில் சமயக்குறவர் திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற தலமாகும். காவிரி தென்கரை தலங்களில் 19-வது தலமாக விளங்குகிறது. சுவாமி அம்மன் திருமணக் கோலத்தில் உள்ள திருக்கோயிலாகும். திருமணத் தடை நீங்கப்பெறும் தலமாகவும் விளங்குகிறது. 3000 களம் தானியம் கொள்ளளவு கொண்ட நெற்களஞ்சியம் அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும்.