அருள்மிகு சதுர்வேத விநாயகர் மற்றும் மாரியம்மன் திருக்கோயில் நீடாமங்கலம் நகர் பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மாரியம்மன் மற்றும் விஸ்வநாதர், விசாலாட்சி, பேச்சியாயி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு நேரம், நட்சத்திரம் ஏதாவது கோளாறு இருந்தால் மாரியம்மனுக்கு தத்துக்கொடுப்பது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.