அருள்மிகு லெட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நகர் பகுதியில் உள்ளது. மூலவர் அருள்மிகு லெட்சுமிநாராயணப்பெருமாள் ஆவார். உற்சவ மூர்த்திகள், அருள்மிகு ருக்மணி, சத்தியபாமாவுடன் அருள்மிகு ஸ்ரீ ராஜகோபாலசுவாமி சன்னதி உள்ளது. கோவிலின் தென்புர பிரகாரத்தில் பெருமாளின் நாயகியும் வடக்கு பிரகாரத்தில் கோதாதேவி எனும் ஸ்ரீ ஆண்டாளும் அர்த்த மண்டபத்தில் அருள்மிகு நம்மாழ்வார், அருள்மிகு திருமங்கையாழ்வார், அருள்மிகு ராமானுஜர், அருள்மிகு கருடாழ்வார் ஆகிய சன்னதி உள்ளது. இவர்கள் பரிவார தேவதைகளாக உள்ளனர்.