63 நாயன்மார்களில் ஒருவர் சோமாசி மாற நாயனார். அம்பர் மாகாளம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் மனைவி சுசீலா தேவி. எம்பெருமான் சிவபெருமானிடம் தீவிர பக்தி கொண்டவர். திருவாரூர் மயிலாடுதுறை ஊர்களுக்கு இடையே உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு கிழக்கே அமைந்துள்ளது இவ்வூர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளியது திருத்தொண்டத் தொகை ஒவ்வொரு சிவனடியார்கள் பற்றியும் அதில் பாடியுள்ளார். இந்த திருத்தொண்டத் தொகையின் சிறப்பு என்னவென்றால் சிவபெருமான் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்... என்று முதலடியை எடுத்துக் கொடுக்க ஒவ்வொரு அடியாருக்கும் அடியேன் என்று தொடர்ந்து சுந்தரர் பாட உருவானது. அந்த பாடல்களில்... அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்... என்று...