தஞ்சாவூர் நாகப்பட்டிணம் நெடுஞ்சாலையிலில் சாலியமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கி.மி தொலைவில் திருபுவனம் என்னும் கிராமத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயில் எழிலில் மிகுந்து அமைந்துள்ளது. இறைவன் பெயர் அடைக்கலம் காத்த அய்யனார் இறைவி பெயர் பூர்ணாம்பாள், புஷ்பாம்பாள் பழமையான இத்திருக்கோயில் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்ற வரலாற்று குறிப்புகளோ, கல்வெட்டுக்களோ கிடைக்கப்பெறவில்லை.