தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பின்னவாசல் கிராமத்தில் அருள்மிகு அகஸ்தீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும்.இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் பிற்கால சோழர்கள் காலத்தை சேர்ந்தது. வெளிப்புற சுவரில் கல்வெட்டுகள் காணப்படுகிறது, இவை தொல்லியல் சிறப்பு வாய்ந்தவை. வேலைப்பாடுகளுடன் கூடிய கல்தூண்கள் காணப்படுகிறது. லிங்கம் மற்றும் சிற்பங்கள் பழமையானவை, நல்ல நிலையில் உள்ளது. மூலவர் விமானம் பழுதடைந்த நிலையில் உள்ளது. வெளிப்புற சுதை சிற்பங்கள் மற்றும் உள்சுவர் வெளிப்பட்டு . இத்திருக்கோயில் கற்பகிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை கல் தளம் மற்றும் கல்தூண்களுடன் காணப்படுகிறது. தூண்கள், உத்தரங்கள் மாவு கற்கள் ஆகியவை சோழர் காலத்தை சேர்ந்தவை. மண்டபத்தின் கிழக்கு பகுதியில் ஒரு கல்தூண் தாழ்ந்துள்ளது....