செல்வ வளம் கொழிக்கும் சோழநாட்டின் கல்லணை ஒட்டிய இந்தலூர் கிராமத்தில் அருள்பலிக்கும் நல்லூர் அம்மன் திருக்கோயில் உள்ளது. எண்பது ஆண்டுக்கு முன்பாக திருச்சி மாவட்டம் நல்லூரில் இருந்து கொண்டுவரப்பட்டு நிர்மாணம் செய்யப்பட்டது. கிராம காவல் தெய்வமாக விளங்குகிறது.