தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் கிராமத்தில் , தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் பெயர்: அருள்மிகு பெருமாள் (இராஜகோபால சுவாமி) இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, விஜயதசமி போன்ற திருவிழாக்கள் உபயதாரர்கள் பங்களிப்புடன் நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை.