திருவாரூர் மாவட்டம் , கூத்தாநல்லூர் வட்டம், கீழமணலி கிராமத்தில் அருள்மிகு லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில் அருள்மிகு யோக நரசிம்மர், ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளார். திருக்கோயிலின் வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் தெற்கு திசை நோக்கி தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.