அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில் மயிலாப்பூர் வரலாறு திருக்கோயிலின் தோற்றம் திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடபுறமும் அருள்மிகு மாதவ பெருமாள் திருக்கோயிலுக்கு மேற்கும் முண்டகக்கண்ணியம்மன்தெரு எனத் தொன்று தொட்டு முண்டகக்கண்ணியம்மன் பெயரில் அழைக்கப்படும் தெருவில் இத்திருக்கோயில் சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக அம்பாள் தோன்றியதுடன் சுயம்பான அருவுருவ தோற்றத்தின் மேல் பகுதி தாமரை மொட்டு வடிவிலும் சுயம்புவின் முகப்பு தோற்றத்தில் அமைந்து நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டுள்ளது.தாமரையின் இன்னொரு பெயர் முண்டகம் என்பதால் மக்கள் இந்த...