காஞ்சிபுரம் மாவட்டம், உத்திமரமேரூர் வட்டம் மற்றும் நகரில் அமைந்துள்ள அருள்மிகு இரட்டைத்தளீகைஸ்வரர் அருள்மிகு இரட்டைத்தாளீஸ்வரர் திருக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழனால் கி.பி.8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் ஸ்ரீ இரட்டைத்தாளீஸ்வரர் திருக்கோயிலும் பெருமாள் திருக்கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்து நித்தியப்படி பூசைக்கு இரண்டு கோயில்களைச் சார்ந்த நெய்வேதியமும் ஒரே நேரத்தில் இறைவனுக்கு இரண்டு தளிகைகளாக சமர்ப்பிக்கப்பட்டதால் இறைவனின் திருநாமம் ஸ்ரீ இரட்டைத்தளீகைஸ்வரர் என்று வழங்கப்பட்டது. பிற்காலத்தில் ஸ்ரீ இரட்டைத்தாளீஸ்வரர் என்று தற்போது வழக்கத்தில் உள்ளது.