அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் என்று அழைக்கப்படும் படிகாசுநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் உள்ள அழகாபுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான கோயிலாகும். இங்கு சிவபெருமான் சிவலிங்க வடிவில் படிகாசுநாதராகவும், அவரது துணைவி பார்வதி சௌந்தரநாயகியாகவும் வழிபடப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணை நாயனார் இக்கிராமத்தில் பிறந்தவர்.