அம்மன்குடி அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயில், கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் மற்றும் உப்பிலியப்பன் கோயில் வழியாக அம்மன்குடி கிராமம் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவில் காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோவிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோவிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும்.