செங்கல்பட்டு மாவட்டம்,சிங்பெருமாள்கோயில் அடுத்து 8 கிலோமீட்டர் தொலைவில் அனுமந்தபுரம் என்ற இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுயம்பு தேவியாக பார்வதி தேவியின் அம்சமான அருள்மிகு பிடாரி காளியம்மன் எழுந்தருளியுள்ளார். தேவி நெற்றியில் அழகான குங்குமம் இட்டு சாந்த ரூபினியாக அமர்ந்த கோலத்தில் ஒரு கையில் திரிசூலமும் மற்றொரு கையில் உடுக்கை மற்றும் குங்குமமும் ஏந்தி சாந்தமான தேவியாக அழகாக காட்சியளிக்கின்றார். மேலும், திருக்கோயில் வெளிபுறத்திலும், உள்ளே இருக்கும் இடத்திலும் திருசூலம் இருக்கும். அதில் எலுமிச்சை பழத்தை சுற்றி அதில் இட்டு வழிபடுவார்கள்.இத்திருக்கோயிலானது 16-ம் நூற்றாண்டை சார்ந்த பழமையான திருக்கோயிலாகும்.தேவியின் எதிரே பலிபீடம் அமைந்துள்ளது. பிடாரி காளியம்மன் திருக்கோயிலின் சிறிது தொலைவில் அருள்மிகு அகோர வீரபத்திர சுவாமியும் சாந்த...