தொண்டை நாட்டிற்கு தலைநகராகிய முக்தி தலம் தீர்த்தம் ஆகியவற்றிற்கு சிறப்பாக விளங்கும் காஞ்சிதமாநகருக்கு கிழக்கே பாலி (பாலாறு)நதியின் தென்பால்அமைந்துள்ள சீட்டணஞ்சேரி,என வழங்கும் ஸ்ரீ கிருஷ்ணபுரி என்ற பெயரால் வழங்கப்படுவதும், பசுக்கள் பூஜித்த ,இடமாகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிவனுக்கு பூஜை செய்த இடமாகவும் கருத பெருகிறது, இத்திருக்கோயிலில் முருக பெருமானால் சிவனுக்கு பூஜை செய்வதற்கு கிணறு உருவாக்கப்பட்டது. என்றும் இத்தீர்த்தம் குமாரதீர்த்தம் என்றும் வழங்கப்பெருகிறது மேலும் இத்திருக்கோயில் முன்பு ஒருகாலத்தில் மகுட வனமாக இருந்ததாகவும் கூறுவர் அதற்கு சான்றாக இத்திருக்கோயிலில் மிக பழமையான மகுட மரம் உள்ளது. இத்தல விருட்சம் மணி புங்க மரம் ஆகும் மேலும் இத்திருக்கோயிலில் அய்யனுக்கும் அம்பாளுக்கும் தனி தனியே...