செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் மதுராந்தகம் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இத்திருக்கோயிலானது அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் மூலவர் ஆனவர் விநாயகப் பெருமான் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். புதியதாக வாகனம் வாங்கும் நபர்கள் அனைவரும் இத்திருக்கோயிலுக்கு வந்து தங்களது வாகனத்தை பூஜைபோட்டுவிட்டு அவ்வாகனத்தை இயக்குவார்கள். இத்திருக்கோயிலின் முக்கிய திருவிழாவானது ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி உற்சவமானது வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்திருக்கோயிலானது திருஷ்டி பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும் மூலவருக்கு வலதுபுறத்தில் கல்யாண சுப்பிரமணியர் சன்னதியும், நவகிரக சன்னதியும் உள்ளது.