அருள்மிகு புத்துமாரியம்மன் தலவரலாறு இரேணுகா என்பவர் ளாமதக்கினி முனிவரின் மனைவி ஆவர். இரேணுகா ஒருமுறை நீர் கொண்டு வரசென்ற போது நீரில் ஒரு கந்தர்வன் நிழலைக்கண்டு மயங்கியதால், தன் கணவனாகிய ளாமதக்கினி முனிவரால் வெறுக்கப்பட்டு, தன் மகனாகிய பரசுராமனால் தலைவேறு உடல்வேறும் துணிக்கப்பட்டாள். பின் மகனாகிய பரசுராமன் தன் தந்தையாகிய ளாமதக்கிளி முனிவரை வேண்டி தாயாராகிய துண்டிக்கப்பபட்ட ரேணுகையை உயிருடன் எழுப்பினான். அப்போது ரேணுகாவின் தலை வேறு ஒரு உடலில் பொருத்தப்பட்டதால், நிலைகெட்ட அவளை, கணவராகிய ளாமக்கினி முனிவர் கிராமப்புறங்களில் சென்று கிராம தெய்வமாகி அவர்களுக்குண்டான நோயைப் போக்கி வழிபாடு பெறுக என்று ஏவியதாக ஒரு கதை கூறுகிறது. இப்போது மாரியம்மன் கோயிலிலேயே தலையை மட்டும்...