உலகம் யாவையும் படைத்தருளும் பிரம்ம தேவரின் மைந்தர் வசிஷ்ட மாமுனிவர். இவர் சிவபெருமானிடம் உபதேசம் பெற்றும் அசலாம்பிகை உடனுறை ஸ்ரீ வைத்தியநாதனை வழிபட்டதால் இத்தலம் திருவதிட்டக்குடி என்ற பெயர் பெற்றது. இது நாளடைவில் மருவி திட்டக்குடி என அழைக்கப்படுகிறது. திருக்கையிலைக்கு ஒப்பான திட்டக்குடி. வசிஷ்டம், கவுரபம், அசனாரணியம், பாபநாசம், இத்தலத்தில் பிரமன் நிறுவிய பிரமலிங்கம், அருள் தந்த வைத்தியலிங்கம், திருமால் தோன்றியதால் பெருமாளுக்கு தனிக்கோயில். மனு மன்னன் நிறுவிய மனுலிங்கம், இறைவன் அசரீரிப்படியே வசிஷ்டன் நிறுவிய பஞ்ச லட்சணமுடைய வசிஷ்டலிங்கம் முதலிய சிவலிங்க திருமேனிகளும், வசிஷ்டனே நிறுவிய கணபதி, முருகன், துர்கா சப்தமாதா, பத்ரகாளியம்மன், பள்ளி கொண்ட பெருமாள், சுகாசனப்பெருமாள் முதலிய பல மூர்த்திகளும் அமையப் பெற்றுள்ளன. ...