திருவண்ணாமலை நகரில் புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலின் கிழக்குப் பகுதியில் திருமஞ்சன கோபுர தெருவில் இந்த கோயில் நகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் முதன்மை தெய்வம் காமாட்சி அம்மன் ஆகும். கா என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை பத்மாசன கோலத்தில் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும். அம்பிகையின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ்ரீசக்ரத்தில், ்ரீ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும். எனவே, காமாட்சி அம்மனை வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பதுடன், மற்றவர்களுக்குக் கொடுத்து வராமல்...