அருள்மிகு அங்காளம்மன் மேல்மலையனூரில் தோன்றி, சித்தலூரில் புற்றாக அமர்ந்த திருத்தலமாகும். 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலாகும். மணிமுக்தா ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கள்ளக்குறிச்சியில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு வெளியூர்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். பிரதிமாத அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதில் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.ஆடி மாத வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியில் இருந்து 9வது நாள் மயானக்கொள்ளையும் மறுநாள் தேர்திருவிழாவும் நடைபெறுவது வழக்கமாகும். இதில் இலட்ச கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.