கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோயிலுக்கு தெற்கே 7கி.மீ தொலைவிலும் சிதம்பரத்திலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உண்டு வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) சிவபெருமானைப் பூஜித்த இடங்கள் ஐந்து புலியூர்களில் ஒன்று ஓமாம்புலியூர் அருள்மிகு பூங்கொடிநாயகி உடனுறை துயர்தீர்த்தநாதர் திருக்கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் வியாக்ரபாதருக்கு நடராஜராக காட்சி அளித்த ஸ்தலமாகும். சிவபெருமானே குருதட்சணாமூர்த்தியாக இருந்து, ப்ரணவத்தின் உட்பொருளை பார்வதி தேவிக்கு உபதேசம் செய்த குருஸ்தலம். ஓம் என்னும் பிரணவத்திற்கு பொருள் உபதேசம் நடைபெற்ற இடமாதலால் ஓம் ஆம் புலியூர், ஓமாம்புலியூர் என வழங்கப்படுவதை அறியலாம். வியாக்ரபாத முனிவருக்கு இறைவன் அருள்...