அரங்கூர், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கிழக்கு நோக்கியபடி சுதை செங்கல் நுழைவாயிலைக் கொண்டுள்ளது. உள்ளே நுழைந்தால் நந்தி பகவான், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை காணப்படுகிறது. மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறையின் கீழ்பாகம் அதாவது அதிட்டானம், சுவர், பித்தி எனப்படும் கொடுங்கை ஆகியவை கருங்கல்லால் ஆனது. கருவறை கொடுங்கையில் யாளி வரிசை உள்ளது. கருவறை தென்புறம் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பமாக உள்ளது. தூண் ஒன்றில் வழிபடும் ஆடவர் உருவம் உள்ளது.