காட்டுமன்னர்கோயிலின் தெற்கில் மூன்று கி.மீ. தொலைவில் ஓமாம்புலியூர் செல்லும் சாலையில் உள்ளது இந்த இராஜேந்திர சோழகன். மன்னர் சோழ அரசமாளிகைகளில் ஒன்று இவ்விடம் இருந்ததாக கூறுவர் இங்கு பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இங்கே இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சிவாலயம் அமைத்து இறைவனுக்கு சோளீஸ்வரர் என பெயரிட்டு கோயில் பூஜைக்காக நிலதானங்கள் செய்து புதிய குடியேற்றமும் செய்யப்பட்டது. இதனால் இவ்வூர் ராஜேந்திர சோழர் அகரம் என பெயர் பெற்று பின்னர் ராஜேந்திரசோழகன் என அழைக்ககப்பட்டுவருகிறது.இக்கோயில் கிழக்கு நோக்கியது ஊரின் கிழக்கு பகுதியில் சிவாலயம் அமைந்து உள்ளது. இறைவன் சோளீஸ்வரர் இறைவி சௌந்தரநாயகி இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். இக்கோயில் 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கருவறை பிரகாரம்...