இக்கோயில் தமிழில் தான்தோன்றீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிவன் கோயிலானது 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. கோவில் சுவர்களில் சோழர்களின் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. இந்தப் பகுதியானது 10 ஆம் நூற்றாண்டின் நடுவில் இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின்கீழ் வந்துள்ளது. இப்பகுதியில் உள்ள முருகன். ஜோஸ்டதேவி, காலபைரவர், துர்கை போன்ற சிலைகள் இராட்டிரக்கூடக் கலைப் படைப்புகளாகும். இந்த பழமையான கோயில் மிகவும் சேதமடைந்ததுள்ளதால், ஜம்பாயின் உள்ளூர் மக்களால் புனரமைக்கப்பட்டுவருகிறது