சென்னை மாநகரில் மண்ணடி பகுதியில் உள்ள லிங்கிசெட்டி தெருவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வாழ் ஆயிர வைசிய தெலுங்கு செட்டியார் குலத்தை சேர்ந்தவர்கள் சிறிய பஜனை மடத்தை ஏற்படுத்தி வழிபட்டு வந்தனர். காலபோக்கில் மேற்படி இடத்தில் புதிதாக ருக்மணி, சத்யபாம சமேத வேணுகோபாலசுவாமி கற்சிலைகள் நிருவி புதியதாக கோவில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர். தற்போதும் மேற்படி திருக்கோயிலில் தெலுங்கு செட்டியார்களால் நிர்வாகம் செய்யகூடிய, நிர்வாக திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் தினசரி நித்யபடி பூஜை வைகனாஸம் முறைப்படி சிறப்புற நடைபெற்று வருகிறது.