இத்திருக்கோயில் மூலவர் அம்மன் சுயம்பு வடிவமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் அம்மன் ஆதிகாலத்தில் கொல்லிமலையில் இருந்து பொதி மாட்டில் அமர்ந்த நிலையில் தலையில் வெட்டுக் காயத்துடன் இந்த ஊர் வந்தபோது சங்கம் முட் செடி புதரில் இருந்த காவல் தெய்வமான முத்தையன் தடுத்து இங்கேயே தங்கி மக்களுக்கு அருள் புரிவாய் என அருளாசி வழங்கியதாக கூறப்படுகிறது.இக்கோயிலில் மூலவர் அம்மன் சுயம்பாக இருப்பதால் திருமணத்தடை நீக்கியும் குழந்தைப்பேறு வழங்கியும் தீராத வியாதிகளுக்கு தீர்வு காணும் அம்மனாகவும் வழங்கி வருகிறார். மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி அமையப்பெற்ற குலக்கார முத்தையன் கிராம மக்களின் காவல் தெய்வமாக இருந்து வருகிறார்