கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தண்ணீர்ப்பள்ளி, அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் மூலவராக பெருமாள் வியாபித்துள்ளார். இத்திருக்கோயிலில் லெட்சுமி தேவியார் முக்கியத்துவம் பெற்று சுற்றி இருக்கும் கிராம மக்களால் பெரிதும் சிறப்புமிக்க தெய்வமாக வழிபடுகிறார்கள். மிக வரப்பிரசாதியாகத் திகழ்பவர் ஸ்ரீலெட்சுமி நாராயணர். ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து, திருப்பாவைமுப்பதும் செய்த ஸ்ரீ ஆண்டாளின் தகப்பனார் பெரியாழ்வார் வழிபட்ட திருவுருவத் திருமேனி ஸ்ரீ லெட்சுமி நாராயணர். இத்திருவுருவ திருமேனியை இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் காணலாம். அத்தகைய பெருமை பெற்ற எம்பெருமானின் திருமேனி திருவுருவம் ஸ்ரீ லெட்சுமி நாராயணர். மேலும் இத்திருக்கோயிலின் உப கோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும்.
| 06:00 AM IST - 10:00 AM IST | |
| 05:00 PM IST - 07:30 PM IST | |
| கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தண்ணீர்ப்பள்ளி, அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் தரிசன நேரமானது குறிபிடப்பட்ட நேரத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. | |