நங்கவரம் அருள்மிகு பிடாரி சாத்தாயி அம்மன் திருக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் சப்த மாதர்களான பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி ஆகியோருக்கு நடுநாயகமாக விளங்கும் சாமுண்டி தாயே இத்திருக்கோயிலில் சாத்தாயி அம்மன் என்ற திருநாமத்தில் கருவறையில் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள். வலது புறம் சாஸ்தாவும் இடது புறம் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். சாத்தாயி அம்மன் நான்கு கரங்களில் பாம்புடன் பம்பை தாங்கியும், மற்றொரு வலது கையில் சூலம் தாங்கியும், இடது கரத்தில் கபாலம் கிண்ணம் தாங்கியும், மற்றொரு இடது கரத்தில் பாசம்அங்குசத்துடன் இடது காளை மடித்து வலது காளை தாமரை இதழ் மீது வைத்தவாறு பீடத்தில் அமர்ந்துள்ளார். அன்னை தன் கழுத்தில் தேள் மாலை அணிந்திருக்கிறாள்....