அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் பொய்யாமணி கிராமத்தின் மையப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . இதன் மூலவர் சிதம்பரேஸ்வரர், அம்பாள் பெயர் சிவகாமி அம்பாள். பிரதோஷ வழிபாடு, அஷ்டமி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது. ராகு காலங்களில் அம்மனை வழிபட்டு விளக்கு ஏற்றினால் திருமண தடைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.இத்திருக்கோயிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.