புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், குளமங்கலம் கிராமம், அருள்மிகு பெருங்காரையடிமிண்ட அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ள சுதையிலான 33-அடி உயரமுள்ள குதிரை சிலை இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது. மாசிமகத்திருவிழா இரண்டு நாட்கள் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்ற திருத்தளமாகும். இத்திருக்கோயில் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை இடையே பனங்குளம் வழியே இத்திருக்கோயிலை வந்தடையலாம். தினமும் காலை 7.00 மணி முதல் 1.00 மணிவரை, மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடை திறக்கப்படுகிறது