புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகரில் மேலராஜவீதியில் அமைந்துள்ளது. மூலவர் தண்டாயுதபாணி அழகாக காட்சி அளிக்கும் திருக்கோயிலுடன் சுற்றுப்பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி சந்நிதி விநாயகர் சந்நிதியும் அமைந்துள்ளது. பிரகாரத்தின் இடதுபுறத்தில் நவக்கிரக நாயகர்கள் தனது துணைவியருடன் காட்சி தந்து அருள்பாலிப்பது இத்திருக்கோயிலின் சிறப்பாகும். இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தன்று சுவாமி திருவீதி உலா நடைபெறும்.