புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர் கீழ 3ம் வீதியில் ஐயர் குளத்தின் கரையில் அமைந்துள்ளது. மூலவர் அருள்மிகு வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் புரட்டாசி சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும் நாள்தோறும் காலசந்தி பூஜையும், சாயரட்சை பூஜையும் நடைபெறுகிறது.