புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை வட்டம், மாலையீடு கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வெள்ளாற்றங்கரையில் அமைதியான சூழ்நிலையில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் மூலவர் பெயர் அருள்மிகு கைலாசநாதர், அம்பாள் பெயர் அருள்மிகு சிவகாமி அம்பிகை, வாசல் பிள்ளையார், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளும் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் பிரதோஷம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நாள்தோறும் காலசந்தி பூஜையும், சாயரட்சை பூஜையும் நடைபெறுகிறது.