குழந்தைபேறு இல்லாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்க வழி செய்யும் ஸ்தலமாக விளங்கி வருகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் பெருங்கோழியூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகும். இத்திருக்கோயிலை குலோத்துங்க சோழீச்சுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய உலகத்தில் மாமேதையாகத் திகழ்ந்த திரு.அகிலன் பிறந்த ஊர் பெருங்களுர் ஆகும். கணவர் நீண்ட ஆயுளுடன் சுகமாக இருக்க அம்பாள் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.