1813-ம் ஆண்டில் தொகுக்கப்பட்ட புதுக்கோட்டை கணக்காய்வுக் குறிப்பு கீழாநிலைக்கோட்டை 1683-ம் ஆண்டு வாக்கில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதி கட்டிடயதாகத் தெரிவிக்கிறது. அதற்கு முன்பே அங்கு கோட்டை இருந்திருக்க வேண்டுமென்பதும், அக்கோட்டையை சேதுபதி புதுப்பித்திருக்கலாம் என்பதும் தெரியவருகிறது. பின்னர் தஞ்சாவூரின் பகுதி முழுவதும் ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழ் வந்தபோது கீழாநிலைக்கோட்டை தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டது. கோட்டை காவல் தெய்வமாக அருள்மிகு அரியநாயகியம்மன் மற்றும் ஆஞ்சநேயருக்கு திருக்கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் குலதெய்வமாக அம்பாள் விளங்குகின்றார். ஆடி மாத கடைசி செவ்வாய் அன்று மது எடுப்பு திருவிழா மிக விமரிசையாக கொண்டாப்படுகிறது. ஆனித்திருவிழாவில் 11-ம் நாளன்று பூக்களால் செய்யப்பட்ட தேரில் அம்மன் பவனி வருவது மிகவும்...