இத்திருக்கோயில் கி.பி.11ம் நூற்றாண்டில் இதன் கட்டுமான அமைப்பை கொண்டு கட்டப்பட்டதாக வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது. இக்கோயில் விமானம் பிற்காலத்தில் செங்கல்லினால் கட்டி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அம்மன் சன்னதி விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் (கி.பி.15 16ம் நூற்றாண்டு கட்டப்பட்டதாக தெரியவருகிறது. இத்திருக்கோயிலில் கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. கி.பி. 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் 12-13ம் நூற்றாண்டில் பாண்டியல் ஆட்சிக்காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 15-16ம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களால் அம்பாள் சந்நிதி கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகின்றது. இராஜகோபுர வாசலில் உள்ள துவார பாலக சிற்பங்கள் உள்ளது. வியாச முனிவரால் வடமொழியில் பாடப்பெற்ற சூத சங்கிதை என்ற புராணம் கொண்டது முதுபெரும் பேரையூர்...