மூங்கில் மரங்கள் அதிகம் இருந்ததால் இத்திருக்கோயில் அம்பாளுக்கு ஸ்ரீவேணுவனேசுவரி, மூங்கில் காட்டு அரசி என்ற பெயர் வழங்கப்படுகிறது, கி.பி.4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கோயில் என்றும், 8-9 நூற்றாண்டிலும், 12-13ம் நூற்றாண்டிலும் புதுப்பிக்கப்பட்டு இருக்கலாம் என்று கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. சிவபெருமான் உறையும் குகைக்கோயிலின் கருவறைக்கு முன் உள்ள துவாரபாலகர் சிற்பங்கள் அழகு மிக்கவை என்று கருதப்படுகிறது. சுமார் 15க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றது. குடுமியான் மலையில் உள்ளது போலவே இசைக்கான இலக்கண கல்வெட்டு இருந்து, அதன் மேல் ஹொய்சாள நாட்டு தளபதியாரால் புதிய கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளதாக வரலாறு தெரிவிக்கின்றது.