பாதாள லோகத்திலிருந்து முனிவர்களும், தெய்வங்களும் பங்குனி மாதத்தில் சிவபெருமான் கருவறைக்கு வந்து பூஜை செய்வதாகவும், இம்மூர்த்தி சுயம்பு மூர்த்தியாக மூலம் தெரியாத பெருமகனாகவும் அருள்புரிகிறார். பாண்டியன் காலத்து கல்வெட்டு (கி.பி.1030) காணப்படுகிறது. அதில் இத்திருக்கோயிலை புதுப்பித்ததாக தெரியவருவதால், இக்காலத்திற்கு முன்பே இத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகிறது. மாதந்தோறும் தேய்பிறையில் அஷ்டமி அன்று இத்திருக்கோயிலில் இருக்கும் காலபைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது. ஆதிகாலத்தில் சம்பாசுரன் மற்றும் பத்மாசுரன் என்ற இரு அரக்கர்களை அழிப்பதற்காக சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து கால பைரவர் தோன்றினார். இவர் கார்த்திகை மாதம் சஷ்டி அன்று அசுரர்களை அழித்ததால்...