கண்களில் ஏற்படும் குறைபாடுகள் நீங்க வழிபடும் தலம் சுக்ர ஸ்தலம். பல்லவ மாமல்லன் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். மூலவர் அனந்த சயனராக (பள்ளி கொண்ட பெருமாள்) நாடிக்கமலத்தில் பிரம்மாவுடன் தேவர்களும், பாற்கடலும் மலையிலேயே செதுக்கப்ட்டுள்ளன. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் புருஷோத்தமன், மாலோல நரசிம்மன் வராஹமூர்த்தி லெஷ்மியுடனும் வைகுந்தபெருமாள் தேவியருடன் ஆகிய சிற்பங்கள் மிகவும் கலையம்சத்துடன் விளங்குகிறது. நரசிம்ம காலத்து கல்வெட்டும் கி.பி.16ம் நூற்றாண்டு கல்வெட்டும் கி.பி.16ம் நூற்றாண்டு கல்வெட்டு ஆகியவை காணப்படுகின்றது. முன்னோர்களின் சாபம் நீங்க இப்பெருமாளுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. குடவரைக்கோயில் மலையைக் குடைந்து சுவற்றிலேயே பள்ளி கொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது.