மன்னருக்கு கொடுக்கவிருந்த பிரசாதத்தில் தலைமுடி இருந்ததால், தனக்கு பூஜை செய்யும் அர்ச்சகரை காப்பாற்ற குடுமியுடன் காட்சி அளித்ததால் இப்பெருமானுக்கு குடுமிநாதர் (சிகாகிரீஸ்வரர்) என்ற பெயர் ஏற்பட்டது. ஆசியாவிலேயே இசைக்கான இலக்கண கல்வெட்டு உள்ள திருக்கோயிலாகும். கி.பி.4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பரதரின் நாட்டிய சரித்திரம் என்னும் நூலுக்கும், இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சங்கீதம் பற்றிய குறிப்பு. ருத்லாச்சாரியார் என்பவரது சீடனாக விளங்கிய மன்னரால் இக்கல்வெட்டு எடுக்கப்பட்டுள்ளது. இதன் எழுத்தமைவு மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலையிலேயே செதுக்கப்படட 63 நாயன்மார்கள் சிற்பங்கள் ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்களிலும், இதையடுத்து ஆனை வெட்டு மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்க சிற்பங்கள் பல உள்ளன. அம்பாள் சன்னதியின் முன்பு...