அருள்மிகு பிடாரி அய்யனார் திருக்கோயில் திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டம், அதவத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிராமதேவதை கோயிலாகும். அருள்மிகு அய்யனார் திருக்கோயில் அருள்மிகு பூரணகலா மற்றும் அருள்மிகு புஷ்பகலா சமேத அய்யனாராக காட்சியளிக்கிறார். மேற்படி அய்யனார் திருக்கோயில் வளாகத்தின் உள்ளேயே அருள்மிகு பனையடி கருப்பர் சன்னதி உள்ளது. இத்திருக்கோயில் இடைப்பட்ட காலத்தில் உருவானதாகவும், கேராளவில் இருந்து பொதிமாட்டின் மூலம் வந்ததாகவும் கூறப்படுகிறது. அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோயில் இவ்வூரின் வடக்கு பகுதியில் சப்தகன்னியரான ஸ்ரீப்ராமஹி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் வடக்கு பார்த்து அமர்ந்தும் இவர்களுக்கு அருகிலேயே கிழக்கு பார்த்து விநாயகரும் மேற்கு பார்த்து வீரபத்ரரும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இத்திருக்கோயில் முன்மண்டபத்தில் ராஜவையரும் வெளியே கிழக்கு நோக்கி கருப்பரும் மேற்கு நோக்கி மதுரைவீரனும் வீற்றிருக்கிறார்கள். இத்திருக்கோயில்...