இத்திருக்கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என்பது தெரிய வருகிறது. இத்திருக்கோயிலானது திருச்சி மாவட்டம், சிறுகமணி கிராமத்தில் இயற்கை அழகுடன் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு காலத்தில் இந்திரன் தன் அழகின் அகந்தையால் ஒரு மா முனிவரை ஏலனம் செய்து அவமானம் படுத்தியதின் விளைவாக மா முனிவர் இந்திரனுக்கு மா பெரும்சாபத்தை வழங்கினார். அந்த சாபம் நீங்க இந்திரம் பல திருக்கோயில்கள் சென்று பூஜை செய்தும் பாவம் விமோச்சனம் கிடைக்கவில்லை, கடைசியாக இத்திருக்கோயில் வந்து சுவாமி அம்பாளை பூஜை செய்து வழிபட்டதும் பாவம் நீங்கியதாக செவிவழிச்செய்தியாக அறியவருகிறது