காவிரியின் தென் கரை வழியே திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் 9.6 கிலோமீட்டர் தொலைவில் அல்லூர் இருக்கிறது. இத்திருக்கோயில் வடக்கு புறத்தில் உள்ள கல்வெட்டுகளில் இத் தல இறைவனை திருவட குடி பரமேஸ்வரர் என்றும் திருவடகுடி மகாதேவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவி சம்வர்த்தினி என்று அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயில் உத்தங்க மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். நாளடைவில் இத்திருக்கோயிலை முதல் பரார்த்தகன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்ட இரு தள கற்றளியாகும். இதன் கருவரை சதுரமானது. இதில் குமுதப்படையும். யாளி வரி மானத்தையும் காணலாம். கருவரையின் மூன்று புறங்களிலும் அரைத்தான்களால் அணி செய்யப்பட்ட தேவ கோஷ்டங்கள் உள்ளது. அர்த்த மண்டப முகப்பில் துவார பாலகர் சிலைகள் உள்ளது....